திண்டுக்கல்லில் 71- வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்பு தேசியக் கொடியை ஏற்றி வீர வணக்கம் செலுத்தினார். பின்பு தேசிய கீதம் பாடினார்கள். இந்நிகழ்ச்சியில் பிசிசி குப்புசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ஜபருல்லா , மாவட்ட பொருளாளர் மரியராஜ் , மண்டல தலைவர் அப்துல்ரஹ்மான் , மண்டல பொருளாளர் ஆசிக் , இளைஞர் காங்கிரஸ் ஷாஜகான் , ஊடகப்பிரிவு முகம்மது அலியார் , மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் நாகலெட்சுமி , காங்கிரஸ் நிர்வாகி சுதா , ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.